குமாரபாளையம்: குமாரபாளையம் அடுத்த, சேலம்- கோவை புறவழிச்சாலை காவிரி ஆற்றின் குறுக்கே இரு பாலங்கள் உள்ளன. சேலம் செல்லும் பாலத்தில் அனைத்து மின் விளக்குகளும் எரிகின்றன. ஆனால், அருகே இருக்கும் கோவை செல்லும் பாலத்தில் மின் விளக்குகள் இருந்தும், எரியவில்லை. அவை பழுதாகியுள்ளன. இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், சங்கிலி பறிப்பு, பணம் மற்றும் மொபைல் போன் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. விடுபட்ட பாலத்தில் உள்ள மின் விளக்குகளை பழுது நீக்கி, சேதமடைந்த மின் விளக்குகளை மாற்றி, மக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE