கரூர்: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின், கரூர் மாவட்ட கிளை சார்பில், தலைவர் காளிதாஸ் தலைமையில், தாலுகா அலுவலகம் முன், தர்ணா போராட்டம் நடந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான குற்றவியல் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் நியமனத்துக்கான வயது வரம்பு, 40 ஆக குறைக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சி தம்பி, மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE