குளித்தலை: குளித்தலை, சிந்தாமணிப்பட்டி. தோகைமலை, பாலவிடுதி பகுதிகளில், பெட்டிக்கடையில் மது விற்ற, 5 பேரை போலீசார் கைது செய்தனர். அதன்படி, கழுகூரை சேர்ந்த அருணகிரி, 55, மேலவெளியூரை சேர்ந்த முருகேசன், 45, ஆகியோர் மீது தோகைமலை போலீசார் வழக்குபதிந்து, கைது செய்தனர். இதேபோல், வாழ்வார்மங்கலத்தை சேர்ந்த முருகேசன், 47, என்பவரை சிந்தாமணிப்பட்டி போலீசார் கைது செய்தனர். குலக்காரன் பட்டியை சேர்ந்த இடும்பன், 59, என்பவரை பாலவிடுதி போலீசார் கைது செய்தனர். குளித்தலை அடுத்த சூரியனூர் பஞ்., பாறைப்பட்டியை சேர்ந்த கனகராஜ், 48, என்பவரை குளித்தலை போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE