கரூர்: கரூர் அருகே, ஆண்டாங்கோவில் சாலையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, போர்வெல் அமைக்கப்பட்டு சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டது. அதில், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் பிடித்து வந்தனர். இந்நிலையில், போர்வெல் குழாய் சேதமடைந்து, தண்ணீர் வராத நிலையில் சின்டெக்ஸ் தொட்டியும் உடைந்துள்ளது. தற்போது, கரூர் நகரப்பகுதியில் மழை பெய்து வருவதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், சேதம் அடைந்த போர்வெல் குழாயை சரி செய்தால், பொதுமக்களுக்கு தண்ணீர் பயனுள்ளதாக இருக்கும். மேலும், உடைந்த நிலையில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியையும் மாற்ற வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE