சென்னை: தமிழகத்தில், கொரோனா தடுப்பூசி போடும் பணியை வரும் 16ம் தேதி, மதுரையில் முதல்வர் பழனிசாமி துவக்கி வைக்கிறார்.
கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள ‛கோவிஷீல்டு' ‛கோவாக்சின்' தடுப்பூசிகளை, சமீபத்தில், அவசர காலத்தில் பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த இரண்டு தடுப்பூசிகளையும் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. 'வரும், 16ம் தேதி முதல், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி துவங்கும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக, மூன்று கோடி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு வழங்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் வரும் ஜன.,16ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணியை, முதல்வர் பழனிசாமி, மதுரையில் துவக்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE