திட்டக்குடி:தேனி மாவட்டம், அல்லிக்குளத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் மதியம் காரில் மனைவி செல்வராணி மகன் ஸ்ரீசாய்ஆத்விக் மற்றும் வயதான பெண் ஒருவருடன் சென்னை நோக்கி சென்றனர். காரை சுப்ரமணியன் என்பவர் ஓட்டிவந்தார். கார் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, கடலூர் மாவட்டம், ராமநத்தம் அடுத்த கல்லூர் கிராமம் அருகே கட்டுப்பாட்டை இழந்து 15அடி உயர சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்தது. இதில் டிரைவர் சுப்ரமணியன் காரிலேயே கருகி இறந்தார். வயதான பெண் மற்றும் செல்வராணி(35) ஆகியோரும் விபத்தில் இறந்தனர். முத்துக்குமார்(40)மற்றும் ஸ்ரீசாய்ஆத்விக்(5) ஆகியோர் சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE