மீன் வியாபாரி மரணம்திருக்கழுக்குன்றம் - திருக்கழுக்குன்றம் அடுத்த, வழுவதுார் ஊராட்சி, திம்மூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர், 55. மீன் வியாபாரி.இவர், நேற்று முன்தினம், விற்பனைக்கு மீன் வாங்குவதற்காக, இருசக்கர வாகனத்தில், திருக்கழுக்குன்றத்திலிருந்து சட்ராஸ் நோக்கி சென்றார்.அப்போது, முள்ளிக்கொளத்துார் அருகே, எதிர் திசையில், ஜே.சி.பி., இயந்திரம் ஏற்றி வந்த மின்கம்பம், எதிர்பாராமல் சரிந்து, சேகர் மீது மோதியது. இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அதே இடத்திலேயே இறந்தார். திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கார் மோதி ஒருவர் பலிகூடுவாஞ்சேரி; கூடுவாஞ்சேரி அடுத்த, ஊரப்பாக்கம், முத்துவேல் நகரைச் சேர்ந்தவர் ரவி, 51. கூலி தொழிலாளி. இவருக்கு, மனைவி ராதா, 39, இரண்டு மகன்கள் உள்ளனர்.இவர், மனைவி ராதா, 39, மற்றும் மகனுடன், 'ஹீரோ' இருசக்கர வாகனத்தில், நேற்று, தாம்பரம் சென்றார்.கிளாம்பாக்கம் அருகில், பின்னால் வந்த, பதிவு எண் இல்லாத கார், ரவி வாகனத்தின் மீது மோதியதில், மூவரும் விழுந்தனர்.இதில், படுகாயமடைந்த ரவி, '108' ஆம்புலன்ஸ் வாகனத்தில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கும் முன் இறந்தார்.
கூடுவாஞ்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.வழிப்பறிக்கு முயன்ற இருவர் கைது கூடுவாஞ்சேரி; கூடுவாஞ்சேரி அடுத்த, காரணைப்புதுச்சேரி வனப்பகுதி உள்ளது. இங்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், 26, பாண்டூர் முனுசாமி, 31, மற்றும் மூன்று பேர், நேற்று, வனப்பகுதியில் நின்று, கூட்டு கொள்ளைக்கு தயாராக இருந்தனர்.தகவலறிந்து வந்த போலீசார், ஹரிகிருஷ்ணன், முனுசாமி ஆகியோரை பிடித்தனர். மற்றவர்கள் தப்பி விட்டனர். கூடுவாஞ்சேரி போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
நீரில் மூழ்கி சிறுவன் இறப்புசெங்கல்பட்டு - செங்கல்பட்டு, பாலுார் அடுத்த, கொங்கனாஞ் சேரியைச் சேர்ந்த வீரராகவன் மகன் ஹரிஹரன், 5. இவர், நேற்று முன்தினம், வீட்டின் அருகில் விளையாடினான்.மேற்கண்ட கிராமத்தின் வழியாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எரிவாயு எடுத்துச் செல்வதற்காக, பள்ளங்கள் தோண்டப்பட்டன.இந்த பள்ளத்தில் தேங்கிய மழை நீரில், சிறுவன் இறந்து கிடந்தான். பாலுார் போலீசார், சடலத்தை மீட்டு, விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE