மயிலாப்பூர் : மயிலாப்பூர், செயின்ட் மேரிஸ் சாலையில் திடீரென, 8 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேனாம்பேட்டை மண்டலம், மயிலாப்பூரில் செயின்ட் மேரிஸ் சாலை உள்ளது. சீனிவாசா தெரு சந்திப்பு அருகே உள்ள இச்சாலையில், திடீரென, 8 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார், பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைத்தனர். பின் அங்கு வந்த மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகள் பள்ளம் ஏற்பட்டத்திற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில், போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE