செங்குன்றம் : செங்குன்றம் அருகே, மழை நீர் கால்வாயில் கிடந்த வாலிபர் சடலத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம், ஈஸ்வரன் கோவில் திருக்குளத்திற்கு செல்லும், மழை நீர் கால்வாயில், நேற்று காலை, 7:30 மணி அளவில், 30 வயது மதிக்கதக்க வாலிபர் சடலம் கிடந்தது.அவர் யார், எப்படி இறந்தார் என்ற விபரம் ஏதும் இல்லை. வடமாநில தொழிலாளியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.சடலத்தை மீட்ட செங்குன்றம் போலீசார், அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE