தேவிபட்டினம் : தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரையில் பூட்டியே கிடக்கும் அம்மா சிறுவர் பூங்காவை திறக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தேவிபட்டினம் நவபாஷண கடற்கரைக்குமுன் னோர்களுக்கு தர்பணம், திருமண தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் இங்கு பரிகார பூஜை செய்யப்பட்டு வருவதால், உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.இத்தகைய முக்கியத் துவம் வாய்ந்த கடற்கரைக்கு வரும் பக்தர்களின் குழந்தைகள் பயனடையும் வகையில், நவபாஷாண கடற்கரை வளாகத்தில் அம்மா சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.2016-17ல், 31.52 லட்சம் ரூபாயில் லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டது.
அதன் பின்பு பூங்கா ஒரு சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில், பூட்டப்பட்டு அரசு பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது.இதனால் நவபாஷாண கடற்கரை வரும் பக்தர்கள் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுஉள்ளது. உள்ளாட்சி நிர்வாகம் பூங்காவை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE