ராமநாதபுரம், : மது அருந்தி கொண்டுஇருந்த முதியவரிடம் ஓசியில் மது கேட்ட வாலிபர், தர மறுத்ததால் அவரை அரிவாளால் வெட்டினார். போலீசார்வாலிபரை கைது செய்தனர்.
சாயல்குடி அருகே மாரியூரை சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணியன் 75. இவர் தென்னந்தோப்பில் நேற்று மதியம் 3:00 மணிக்கு மது அருந்திகொண்டிருந்தார். அங்கு சென்ற அதே ஊரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் சிவமுருகன் 28, மது கேட்டுள்ளார். சுப்பிரமணியன் தர மறுத்தார். ஆத்திரம் அடைந்த சிவமுருகன் சுப்பிரமணியனை அரிவாளால் வெட்டினார். ஆபத்தான நிலையில் சுப்பிரமணியன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாயல்குடி போலீசார் சிவமுருகனை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE