திருவாடானை : திருவாடானையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கூட்டம் நடந்தது.
திருவாடானை மாஜிஸ்திரேட் பாலமுருகன் தலைமை வகித்தார்.அறிவியல் இயக்க ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் வரவேற்றார். பேராசிரியர் கருணாகரன் எழுதிய மார்பக புற்றுநோய் குறித்த ஆய்வு கட்டுரை வெளியிடப்பட்டது. அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்க தேசிய செயலாளர் ராஜமாணிக்கம் வெளியிட, தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரி சந்திரமோகன் பெற்றுக்கொண்டார்.வக்கீல் தனபால், எழுத்தாளர் சங்க மாவட்ட செயலாளர் வான்தமிழ், அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கிளை செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE