திருத்தணி, : வரும் சட்டசபை தேர்தல் பிரசாரம், முதல்வர் இ.பி.எஸ்., துவங்கி, மாவட்டம் தோறும் திறந்த வேனில் பிரசாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில், இன்று, திருத்தணி நகரில் முதல்வர் தேர்தல் பிரசாரம் செய்வார் என, திட்டமிட்டிருந்தது.இதற்காக, இடம் தேர்வு மற்றும் அதை சுத்தம் செய்யும் பணிகள், சுவர் விளம்பரம் எழுதும் பணியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில், முதல்வர் இ.பி.எஸ்., இன்று முக்கிய பல்வேறு ஆய்வு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், திருத்தணி நகரில் தேர்தல் பிரசாரம் தேதி அறிவிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை கழித்து, முதல்வர் திருத்தணிக்கு வருவார் என, கட்சி வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE