மதுரை : பொங்கலையொட்டி சென்னை எழும்பூர் -- நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் இயக்குகிறது.
சென்னை எழும்பூரில்இருந்து ஜன., 12, 13ல் இரவு 10:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(06091) மறுநாள் காலை 11:10 மணிக்கு நாகர்கோவில் செல்லும். மதுரையில் இந்த ரயில் காலை 6:30 மணிக்கு புறப்படும்.மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் ஜன., 16, 17ல் மதியம் 2:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(06092) மதுரையில் இரவு 7:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3:40 மணிக்கு சென்னை எழும்பூர் செல்லும்.இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி, திருநெல்வேலி ஸ்டேஷன்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் பயணிக்க முன்பதிவு அவசியம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE