ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இவர்களை விடுவிக்ககோரி இன்று(ஜன.,11) முதல் மீனவர்கள் 'ஸ்டிரைக்கில்' ஈடுபடுகிறார்கள்.
ராமேஸ்வரத்தில் இருந்து ஜன.,9ல் கடலுக்கு சென்ற மீனவர்கள் மீன்வளம் நிறைந்த இந்திய-இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர். அன்றிரவு 5க்கு மேலான ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கி காட்டி மிரட்டி விரட்டினர். பீதியடைந்த மீனவர்கள் வலையை படகில் இழுத்து வைத்து திரும்பினர்.இருப்பினும் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் கிருபை என்பவரின் படகை பிடித்த இலங்கை வீரர்கள் அதில் இருந்த மீனவர்கள் கிருபை 37, வளன்கவுசிக்24, மிக்கேயாஸ் 30, கினிங்ஸ்டன் 28, சாம்ஸ்டில்லர் 20, நிஜான் 30, பிரைட்டன் 21, கிேஷாக் 27, மாரி 45, ஆகியோரை கைது செய்தனர்.
ஊர்காவல்துறை நீதிமன்ற உத்தரவுபடி காங்கேசன்துறைமுகம் கடற்படை முகாமில் தனிமையில் அடைத்தனர்.ஸ்டிரைக்: கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையை கண்டிக்க வேண்டும். கச்சத்தீவில் மீன்பிடிக்கும் உரிமையை மத்திய, மாநில அரசுகள் பெற்ற தரவும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.தற்போது கைது செய்யப்பட்ட 9 பேர் உள்பட 42 மீனவர்களை இலங்கை அரசு விடுவிக்ககோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (ஜன.,9) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.--
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE