தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டாரத்திலுள்ள விவசாயிகளை, நேரடியாக சந்தித்து ஆலோசனை வழங்க உள்ளதாக, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.தொண்டாமுத்தூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சித்ரபானு கூறுகையில், "உழவர்-அலுவலர் திட்டம் மூலம், தோட்டக்கலை உதவி அலுவலர்கள், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கிராமங்களுக்கு சென்று, அங்கு உள்ள, 10 முன்னோடி விவசாயிகளை நேரடியாக சந்தித்து, பயிரிட்டுள்ள பயிர்கள் குறித்தும், விவசாயிகளின் தேவைகள் குறித்தும் தெரிந்து, தீர்வு வழங்குவார்கள். இதற்கென பிரத்யேகமாக, தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் அடங்கிய, 'வாட்ஸ்ஆப்' குழு உருவாக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE