மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அடுத்த தொழுவந்தாங்கல் அண்ணாநகரில் சேறும் சகதியுமான சாலையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த தொழுவந்தாங்கல் அண்ணாநகர் மற்றும் தொழுவந்தாங்களில் பல இடங்களில் சாலை வசதியில்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மழை காலத்தில் இப்பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் சேறும் சகதியாக மாறிவிடுகிறது.
பொதுமக்கள் சாலையில் செல்ல மிகவும் சிரமபட்டு செல்கின்றனர். ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை கூறியும் சாலையை சீரமைக்க எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை. மழை காலங்களில் தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE