கள்ளக்குறிச்சி: க.மாமனந்தல் கிருஷ்ணாநகர் பகுதியில் குடியிருப்பு தேங்கி நிற்கும் தண்ணீரால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த க.மாமனந்தல் 1வது வார்டான கிருஷ்ணா நகரில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வளர்ந்து வரும் பகுதியாக உள்ள கிருஷ்ணா நகரில் சாலை, கழிவுநீர் கால்வாய், மின்விளக்கு ஆகியவை அமைத்து தரப்படவில்லை. தெருக்கள் மண்சாலையாகவே உள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையினால் கிருஷ்ணாநகர் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
குறிப்பாக சாலையில் உள்ள குட்டைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரினால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பைக் மட்டுமே செல்லும் வகையில் சாலை உள்ளது. கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் சேற்றில் சிக்கி கொள்ளும் நிலை இருப்பதால் அவ்வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.க.மாமனந்தல் கிருஷ்ணா நகரில் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE