உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு மட்டும் பொங் கல் பொருட்கள் வழங்கிவிட்டு, மற்ற தொழிலாளர்களுக்கு வழங்க அதிகாரிகள் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்துார்பேட்டை தாலுகாவில் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலத்துறை சார்பில் அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட 8 வகையான பொங்கல் பொருட்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்பேரில் உளுந்துார் பேட்டை, திருநாவலுார் ஒன்றியத்திற்குட்பட்ட தொழிலாளர்களுக்கு உளுந்துார்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஆனால் கட்டுமான தொழிலாளர்களுக்கு மட்டும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்ததால் 100க்கும் மேற்பட்டோர் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.மேலும், புதுப்பிக்காதவர்களுக்கும் பொங்கல் பொருட்கள் வழங்க மறுத்தனர்.இதனால் நலவாரிய அதிகாரிகளிடமும், போலீசாரிடமும் மற்ற தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை அலுவலர் முத்துடேனியல் கூறுகையில், தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு மட்டும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுகிறது. மற்ற தொழிலாளருக்கு பொங்கல் பொருட்கள் வழங்குவதாக தெரிவிக்கப்படவில்லை என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE