திட்டக்குடி : திட்டக்குடியில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், சோளம், உளுந்து பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் தாசில்தாரிடம் கோரிக்கை விடுத்தனர்.
திட்டக்குடி பகுதியில் பெய்த மழையின் காரணமாக நிதிநத்தம் ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இதனால் அருகிலிருந்த நெல், மக்காச்சோளம் மற்றும் உளுந்து வயல்கள் உள்ளிட்ட 600 ஏக்கர் பரப்பிலான பயிர் நீரில் மூழ்கிபாதிக்கப்பட்டது.வேளாண் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, சேத மதிப்பை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் திட்டக்குடி தாசில்தார் சையது அபுதாகீரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE