விருத்தாசலம் : பெரியவடவாடியில் ஏரிகளுக்கு செல்லும் பாசன வாய்க்காலை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடியில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இங்குள்ள விளைநிலங்களில் இருந்து வழிந்தோடி வரும் மழைநீர், வாய்க்கால் வழியாக வீரநாயக்கன் ஏரி, குண்டாரெட்டி ஏரிகளுக்கு செல்கிறது. இதன் மூலம் ஏரிகளில் நீர்ப்பிடிப்பு அதிகரிப்பதுடன் விவசாய பணிகளுக்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படாமல் பாதுகாக்கிறது.இந்நிலையில், பாசன ஏரி துார்ந்து, முட்புதர் மண்டிக்கிடப்பதால் மழைநீர் தடையின்றி வழிந்தோட முடியாமல் ஆங்காங்கே தேங்கி, சாலையில் வழிந்தோடி வீணாகிறது.எனவே, ஏரிகளுக்கு தண்ணீர் தடையின்றி செல்ல பாசன வாய்க்காலை துார்வார பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE