பெண்ணாடம் : பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் சம்பா பட்டத்தில் இரண்டாயிரம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்தனர்.
நெற்கதிகர்கள் முதிர்ந்து, அறுவடைக்கு தயார்நிலையில் உள்ளது. சமீபத்தில் பெய்த தொடர் மழைக்கு, மாளிகைக்கோட்டம், அரியராவி, தீவளூர், தாழநல்லுார், கோனுார், வடகரை, நந்திமங்கலம், இறையூர் உட்பட பல கிராமங்களில் விளைந்த நெற்கதிர்கள் அடியோடு சாய்ந்து தண்ணீரில் மூழ்கியது.தற்போது தண்ணீர் வடிந்தாலும் இயந்திரங்கள் மூலம் சாய்ந்துகிடக்கும் நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்துவருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE