சென்னை : சசிகலா குறித்த சர்ச்சை பேச்சுக்கு, உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தி.மு.க. சட்டத்துறை அணி மாநாட்டை கொடியேற்றி துவக்கிய உதயநிதி பேசியதாவது: பெண்களை புண்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. அதற்கு மன்னிப்பு கோர முடியாது. அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.

பெண்களின் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன். கருணாநிதியும் ஸ்டாலினும் என்னை அப்படி வளர்க்கவில்லை. நான் பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் பொய்யான அவதுாறு வழக்குகளை எதிர்கொண்டு வருகிறேன். சட்டத்துறை என்னை காப்பாற்றும் என்று நம்பித்தான் பல இடங்களில் சவால் விட்டு வருகிறேன். இவ்வாறு பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE