திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களில், மதுரை, தேனி, நெல்லை, திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தொழிலாளர்கள், சொந்த ஊர் செல்லவும், பண்டிகையை கொண்டாடவும் வசதியாக, தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் கூடுதல் நாட்கள், விடுப்பு வழங்கப்படுவது வழக்கம். பொங்கலையொட்டி 13ல் துவங்கி 17ம் தேதி வரை, தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது; 18 முதல், நிறுவனங்கள் மீண்டும் இயங்க உள்ளன.கொரோனா காலத்தில் சொந்த ஊர் சென்ற வெளிமாநில தொழிலாளர்கள், தொடர்ந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டுள்ளனர். தமிழக தொழிலாளர் பணிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டாலும், வடமாநில தொழிலாளரை கொண்டு, உற்பத்தியை தொடர, நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE