திருப்பூர்:ஊத்துக்குளி ஆர்.எஸ்., மகாராஜா பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் ஷானவாஸ், 32; அப்பகுதியில் பனியன் வேஸ்ட் குடோன் நடத்தி வருகிறார்.நேற்று மதியம், குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. தொடர்ந்து, தீ மளமளவென எரிய ஆரம்பித்தது. இதை பார்த்த ஷானவாஸ் உள்ளிட்டோர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். திருப்பூர் வடக்கு தீய ணைப்பு துறையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement