வால்பாறை:பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், அரசு உதவித்தொகை பெற பயனாளிகள், ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.தமிழக அரசு சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இரு பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகையாக தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது.ஆண் வாரிசு இல்லாத குடும்பத்திற்கு, இத்தொகையை அரசு வழங்குகிறது. இந்த தொகையை பெண்கள், 18 வயது பூர்த்தியடைந்த பின் வட்டியுடன் தொகையை பெற்றுக்கொள்ளலாம். மாவட்ட சமூக நலத்துறை, கிராமப்புற வளர்ச்சி அலுவலர் கம்மாடத்தி கூறுகையில், ''வால்பாறை நகராட்சியில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு அரசின் சார்பில் பெண் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதுவரை, 716 பேர் விண்ணப்பித்துள்னர். அவர்கள் அனைவருக்கும் தொகைக்கான பத்திரம் வந்துள்ளது.மூன்று முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் இந்த தொகைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்துடன் ஆண் வாரிசு இல்லாத சான்று, கருத்தடை செய்த சான்று, இருப்பிடம் மற்றும் வருமான சான்று சமர்ப்பிக்க வேண்டும். 18 வயது பூர்த்தியான பின் முதிர்வு தொகையுடன் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE