மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே, கழுகரை பகுதியிலுள்ள வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுவதால், புதிய வீடுகள் கட்டித் தரவேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.மடத்துக்குளம் பேரூராட்சி, கழுகரை நான்காவது வார்டு பகுதியில் காலனி உள்ளது. இங்குள்ள மக்களுக்கு, கடந்த 1989ம் ஆண்டு அரசு, 50 வீடுகள் கட்டிக்கொடுத்தது. பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது அந்த வீடுகள் சேதமடைந்துள்ளன.இதுகுறித்து காலனி மக்கள் கூறியதாவது: கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள், இடிந்து விழ தொடங்கியுள்ளன. வீட்டில் வசிக்கவே அச்சமாக உள்ளது. இங்குள்ள மக்கள் எண்ணிக்கை பெருகியதால், தற்போது, 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.அரசு வழங்கிய வீடுகள் ஒவ்வொன்றிலும், இரண்டு குடும்பங்கள் உள்ளோம். இதர மக்கள் குடிசை அமைத்து வசிக்கின்றனர். கடந்த சில நாட்களாக பெய்யும் மழையால், காலனி மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்கு தீர்வாக இங்குள்ள, 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கும் புதிய வீடுகள் கட்டித்தரவேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE