அன்னுார்:பல நாட்களாக, ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள சேதமடைந்த பஸ்களால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.அரசு போக்குவரத்து கழக கிளைகளில், 14 ஆண்டுக்கு மேலாக இயக்கப்பட்டு, கண்டமாக்கப்பட்ட பஸ்கள் மற்றும் விபத்துக்குள்ளான பஸ்கள் ஏலம் விடப்படுகின்றன. அப்படி ஏலம் விடப்பட்ட எட்டு பஸ்களை எடுத்த ஏலதாரர், அதில் அன்னுார் கிளையில் எடுத்த நான்கு பஸ்களை, நான்கு நாட்களாக, அன்னுார் - கோவை ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி உள்ளார். 'கோவை அன்னுார் சாலை, 20 அடி அகலம் மட்டுமே உள்ளது. சாலையோரத்தில்,4 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள பஸ்களால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் விபத்து ஏற்படும்' என, அன்னுார் மக்கள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE