பெ.நா.பாளையம்:கவுண்டம்பாளையத்தில் போலி நகையை அடமானம் வைக்க முயன்ற பெண்ணை, துடியலுார் போலீசார் கைது செய்தனர்.கவுண்டம்பாளையம் எஸ்.பி., நகரில் தங்க நகை அடமான கடை வைத்து நடத்தி வருபவர் ஜீவாராம். இவருடைய கடையில் தங்கமோதிரம் ஒன்றை அடமானம் வைத்து பணம் பெற, பெண் ஒருவர் வந்தார். மோதிரத்தை பரிசோதித்த ஜீவாராம், அதுபோலியானது என தெரிந்து கொண்டார். இது குறித்து ஜீவாராம், துடியலுார் போலீசில் புகார் செய்தார்.விசாரணையில், அந்தப் பெண் காசி கவுண்டன்புதுார் சேர்ந்த ஜெயபிரபா, 42, என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட பெண், பல இடங்களில் இதுபோன்று மோசடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE