மேட்டுப்பாளையம்:காரமடை ரோட்டரி சங்கம் சார்பில் பொங்கல் விழா மற்றும் தேசிய இளைஞர் தின விழா நடந்தது.விழாவுக்கு தலைவர் சிவ சதீஷ்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஞானசேகரன் வரவேற்றார். டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லுாரி நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன், விழாவை துவக்கி வைத்தார்.முன்னதாக பெண்கள் ரங்கோலி கோலமிட்டு மகிழ்ந்தனர். பொங்கல் வைத்து குலவையிட்டு கொண்டாடினர். ஒற்றை, இரட்டை மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், ரேக்ளா வண்டிகள், பண்ணை மாடுகள், வெள்ளாடு, செம்மறி ஆடுகள், நாட்டுக் கோழிகள் ஆகியவற்றை காட்சிக்கு கட்டி வைத்திருந்தனர். மதியம் தேசிய இளைஞர் தின விழா நடந்தது. டாக்டர்கள் இஸ்மாயில், விஜயகிரி மற்றும் ஜெயராஜ் ஆகியோர் பேசினர். கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE