மதுக்கரை:கோவை அருகே, கார் கடத்தல் வழக்கில், 6 பேர் கைது செய்யப்பட்டனர்.கேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்தவர் அப்துல் சலாம், 54. கடந்த மாதம் 25ம் தேதி, அதிகாலை, நவக்கரை எல்லை காளியம்மன் கோவில் அருகே காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது இரு வாகனங்களில் வந்த கும்பல், அப்துல் சலாம் மற்றும் டிரைவரை தாக்கி, கார் மற்றும், 27 லட்சம் ரொக்கத்தை பறித்துச் சென்றனர்.க.க.சாவடி போலீசார் விசாரித்தனர். மறுநாள் மாதம்பட்டி அருகே, கார் மீட்கப்பட்டது. அதில், ஹவாலா பணம், 90 லட்சம் ரூபாய் சிக்கியது.மொபைல்போன் பதிவை கொண்டு, பிள்ளையார்புரத்தை சேர்ந்த உன்னிகுமார், 44 சிக்கினார். அவரது தகவலில், பாலக்காட்டை சேர்ந்த, சந்தோஷ், 37, சந்தீப், 32, ராதாகிருஷ்ணன், 47, திருச்சூரை சேர்ந்த சுபின், 29, ஸ்ரீஜித், 27 கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, மூன்று கார்கள், 4.27 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.போலீசார் கூறுகையில், 'அப்துல் சலாமுக்கும், சந்தோஷுக்கும் பழக்கம் உள்ளது. அப்துல் சலாம், தனது காரில் தொகை கொண்டு வருவதை அறிந்து, கூட்டாளிகளுடன் பணத்தை பறித்துள்ளார்' என்றனர்.அனைவரும் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE