மேட்டுப்பாளையம்:காரமடையில் தமிழக பா.ஜ., துணைத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:வரும் ஐந்து ஆண்டுகளிலும், மக்கள் தி.மு.க., வுக்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள். குடும்ப ஆட்சிக்கும், ஊழல் ஆட்சிக்கும் எதிராக, பா.ஜ., குரல் கொடுத்து வருகிறது.ஸ்டாலின், உதயநிதி ஆகியோர், தவறான தகவல் கூறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தி.மு.க., எப்போதும் பெண்களுக்கு எதிரான கட்சியாகும். உதயநிதி பேச்சு, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. வரும், சட்டசபை தேர்தலில், பெண்கள் தி.மு.க.,வுக்கு ஓட்டு போட மாட்டார்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE