பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன், 42. வெள்ளமடை ஊராட்சி துணைத் தலைவர். இவரது மனைவி துளசிமணி, 38. கணேசன் வைத்துள்ள கோழிக்கடையில் சுரேஷ்குமார், 25, என்பவர் வேலை செய்து வந்தார்.சில நாட்களுக்கு முன், சுரேஷ்குமாரை கணேசன் வேலையை விட்டு நிறுத்தி விட்டார். ஆத்திரமடைந்த சுரேஷ்குமார், துளசிமணி மற்றும் அவரது தந்தை நாகராஜை 62, கத்தியால் குத்தினார். அப்போது ஏற்பட்ட மோதலில், சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்டார்.விசாரணையில், ஊராட்சி துணை தலைவர் கணேசன், 42, அவரது தம்பி முருகானந்தம், 40, ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் இருவரையும் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE