கம்பம் : தோட்டத்தில் கஞ்சா சாகுபடி செய்து மதுரை சிறையில் உள்ள உள்ள 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கம்பம் பகுதியில் கஞ்சா விற்பனையை ஒழிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். நவ. 11 அதிகாலை மோப்பநாய் வெற்றி உதவியுடன், மேற்கு மலையடிவாரத்தில் 50 சென்டில் சாகுபடி செய்த கஞ்சா தோட்டம் கண்டுபிடித்து 150 செடிகளை தீ வைத்து எரித்தனர். கஞ்சா தோட்டம் அமைத்தவர்களை கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது. சாய் சரண் தேஜஸ்வி எஸ்.பி. உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையிலான தனிப்படையினர் கம்பம் ராஜா 59, பழனிச்சாமி 55, நாகராஜ் 42, பி.ராஜா 38 ஆகியோரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. பரிந்துரை செய்தார். 4 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE