பெரியகுளம் : தென்கரை பாரதிநகரில் ரோடு அமைக்காததால் மழைநீர் குளம் போல் தேங்கியதால் வாகனங்கள் பொதுமக்கள் செல்ல சிரமம் அடைந்து வருகின்றனர்.
தென்கரை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெரியகுளம் தென்கரை பேரூராட்சி 1 வது வார்டு பாரதிநகர். இணைப்பு பகுதியாக ஜெயம்நகர், பாலாஜிநகர் என ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இப் பகுதி உருவாகி 14 ஆண்டுகளாகியும் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் சிரமம் அடைகின்றனர். பாரதி நகரில் சேதமடைந்த ரோடு 2 ஆண்டுகளாக சீரமைக்காமல் உள்ளது.இப் பகுதியில் இருந்து பேரூராட்சிக்கு பிளாட் அப்ரூவல், கட்டட அனுமதி, வரி என அதிக வருவாய் கிடைக்கிறது.
ஆனால் இந்தப்பகுதி ரோடு, குண்டும், குழியுமாக உள்ளது. ரோட்டில் குளம்போல் மழைநீர் தேங்கி, வாகனங்கள், மக்கள் நடந்து செல்ல சிரமமாக உள்ளது. தென்கரை பேரூராட்சி நிர்வாகம் விரைவில் ரோடு அமைக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE