வத்தலக்குண்டு : வத்தலக்குண்டில் ரோடு விரிவாக்கப்பணி சரியான திட்டமிடல் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
வத்தலக்குண்டில் ரோடு விரிவாக்கப்பணி கழிவு நீர் வாய்க்காலுடன் திண்டுக்கல், மதுரை ரோடுகளில் நடைபெறுகிறது. கம்பிகளைக் கொண்டு கான்கிரீட் அமைக்காமல் 6 அடிக்கு அடைப்பு மட்டுமே வைத்து கான்கிரீட் கலவையை கொட்டியதால் மழைக்கு சில இடங்களில் சாக்கடை இடிந்து விழுந்தது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள காளியம்மன் கோயில் அருகே மதுரை ரோட்டில் சாக்கடை கட்ட தோண்டிய பள்ளம் ஒரு வாரமாகியும் பணி துவங்கவில்லை.
ம.தி.மு.க.,ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் கூறுகையில்,'' நெடுஞ்சாலைத்துறை திட்டமிடல் இல்லாமல் பணிகளைச் செய்கிறது. கடைகளுக்கு முன் அறிவிப்பு கொடுக்காததால் சிரமம் ஏற்படுகிறது. மதுரை, திண்டுக்கல் ரோடுகளில் கழிவு நீர் ரோட்டில் ஓடுகிறது. வத்தலக்குண்டு நெடுஞ்சாலைத்துறையிடம் முறையிட்டும் பலனில்லை. பொதுமக்கள் கழிவுநீரில் தான் நடந்து செல்கின்றனர்'', என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE