திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஊர்க்காவல் படைவீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடந்தது.
மாவட்டத்தில் இருபாலரும் என 54 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி நிறைவு விழாவில் நேற்று டி.ஐ.ஜி., முத்துச்சாமி பேசியது: ஊர்க்காவல் படையும், போலீசாரும் வேறு அல்ல. காவல் துறைக்கு உதவுவதில் பெரும்பங்கு ஊர்க்காவல் படையினரை சேரும். பொது கூட்டம், கோயில் விழாக்கள் போன்றவற்றில் போலீசார் சோர்ந்தாலும் ஊர்க்காவல் படையினர் சிறப்பாக பணியாற்றுகின்றனர்.பல குற்ற வழக்குகளிலும் உதவியாக இருந்துள்ளனர். திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையினர் குறித்து ஒரு புகார் கூட வந்ததில்லை.
சொந்த வேலையையும் பார்த்துக்கொண்டு சேவை மனப்பான்மையோடு வேலை செய்பவர்கள் ஊர்க்காவல் படையினர். படித்தவர்கள் மேற்படிப்பு படிக்கவும், உயர் பதவிக்கு செல்லவும் முயற்சி செய்யுங்கள், என்றார். ஏ.டி.எஸ்.பி., இனிகோ திவ்யன், ஆயுதப்படை டி.எஸ்.பி., ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் சேரலாதன் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE