வேடசந்துார் : வேடசந்துார் குடகனாற்றில் நடப்பு மழைக் காலத்தில் போதிய நீர் வரத்து இல்லை. அவ்வப்போது வந்த குறைந்த அளவிலான கழிவு நீரால் 27 அடி உயரம் கொண்ட அணைக்கு 12 அடி என்ற அளவில் தண்ணீர் வந்துள்ளது.
ராஜவாய்க்கால் பகுதியில் தடுப்பணையை உயரமாக கட்டியதால் முறையாக தண்ணீர் வராமல் இருந்ததே அணைக்கு தண்ணீர் வராததற்கு காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர்.தற்போது பெய்து வரும் தொடர் மழையால் கடந்த இரு நாட்களாக குடகனாற்றில் நீர்வரத்து மீண்டும் துவங்கியுள்ளது. தற்போது 13 அடியை நோக்கி நீர் வரத்து உயர்ந்து வருகிறது. இதே நிலை சில நாட்களுக்கு தொடரும் பட்சத்தில், மேலும் சில அடிகள் தண்ணீர் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE