ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நிறுத்துமிடம், நடைபாதையில் டூவீலர்களை ஆக்கிரமித்து நிறுத்துவதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டிற்குள் தினமும் 200 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. ஊரடங்கு தளர்விற்கு பின் அதிகளவில் பஸ்கள் சென்று வரும் நிலையில் பஸ்கள் நிறுத்துமிடம், பயணிகள் நடைபாதையை ஆக்கிரமித்து டூவீலர், கார்களை நிறுத்துகின்றனர்.இதனால் பஸ்களை அந்தப்பகுதியில் நிறுத்த முடியாத நிலை உள்ளது. பயணிகள் சுலபமாக நடந்து சென்று பஸ் ஏறுவதிலும் சிரமம் உள்ளது. இதுமட்டுமின்றி நடைபாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளாலும் பயணிகள் அவதியுறுகின்றனர். நகராட்சி அதிகாரிகள் பஸ் ஸ்டாண்டிற்குள் இடையூறாக டூவீலர்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE