கன்னிவாடி : கோம்பை வாய்க்காலில் தண்ணீர் திருடுவதால் 2 ஆயிரம் ஏக்கர் பாசன நிலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பன்றிமலை, சோலைக்காடு, முறுக்கடி, அழகுமடையில் நீர் பிடிப்பாகக் கொண்டு தருமத்துப்பட்டி அடிவாரத்தில் கோம்பை நீர்தேக்கம் அமைந்துள்ளது.
இதனை சுற்றியுள்ள 300 ஏக்கர் பாசனம் மட்டுமின்றி, தருமத்துப்பட்டி, சுரக்காபட்டி, கரிசல்பட்டி, கோவிந்தாபுரம் பகுதிகளுக்கான நிலத்தடி நீராதாரமாக விளங்குகிறது. இதன் மறுகால் நீர் சீலையன்குளம், கதிரையன்குளம், வெள்ளையன்குளம், கெண்டையம்பட்டி என 80க்கும் மேற்பட்ட குளங்களுக்கான வரத்து நீராக அமையும்.கடந்த 7 ஆண்டுகளாக இந்த வாய்க்கால் வறண்டிருந்த சூழலில் சமீபத்திய மழையால் கோம்பை நீர்தேக்கம் நிரம்பியது. மறுகால் துவங்கி 6 வாரங்களாகும் நிலையில் 30 கி.மீ., க்கு கூட வரத்து நீர் எட்டவில்லை.
சீலையன்குள மறுகால் சேதத்தால் குடகனாற்றிற்கு தண்ணீர் செல்வதும், வழியோர விவசாயிகள் மின் மோட்டார் மூலம் தண்ணீர் திருடுவதே இதற்கு காரணம். இதனால் 2 ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பு பாதிக்கும் நிலை உள்ளது.* நடவடிக்கை இல்லைவிவசாயி சி.தோமையார், குட்டத்துப்பட்டி: மின்மோட்டார் மூலம் 24 மணிநேரமும் தண்ணீர் திருடுகின்றனர். இதனால் தண்ணீர் வரத்தின்றி குளங்கள் வறண்டுள்ளன. 15 ஆயிரம் ஏக்கர் சாகுபடியும், 80 க்கும் மேற்பட்ட கிராமத்தினர் நீராதாரமின்றி பாதிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE