ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் ஆற்றில் மணல் கடத்தலை தடுத்த சாயல்குடி போலீஸ் ஏட்டு செந்துார்பாண்டி, போலீஸ்காரர் சக்தி கணேஷ் ஆகியோரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற நால்வரை போலீசார் தேடுகிறார்கள்.
நேற்று அதிகாலையில் மூக்கையூர் ஆற்றுக்கு சென்ற போலீசார் சந்தேகத்தின் பேரில் 2 பேரை விசாரித்து அலைபேசியை பறிமுதல் செய்தனர். அப்பேது மணல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்த ஏட்டு செந்துார்பாண்டி, போலீஸ்காரர் சக்திகணேஷ் நிறுத்த முயன்றனர். போலீசாரை மோதுவது போல டிராக்டரை ஓட்டி சென்றனர்.விலகிய போலீசார் டூவீலரில் பின்தொடர்ந்தனர். ஓடும் டிராக்டரில் செந்துார் பாண்டி ஏறினார். டிராக்டரில் இருந்தவர் மணல் அள்ளி செந்துார்பாண்டி முகத்தில் அள்ளிவீசியதால் அவர் நிலைதடுமாறி ரோட்டில் விழுந்தார்.காலில் காயமடைந்த செந்துார்பாண்டி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகாரில் சாயல்குடி போலீசார் எஸ்.நொம்பகுளம் வினித் முருகன், மேலச்செல்வனுார் செந்தில்குமார் உட்பட 4 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிந்து தேடுகின்றனர்.இதற்கிடையே மறைவான இடத்தில் நிறுத்தப்பட்ட டிராக்டர் மணலுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE