திருப்பூர் : சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,விடம் இரண்டு 'சீட்' கேட்டுள்ளதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கூறினார்.
முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம், திருப்பூரில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஒன்றும் புதிதல்ல. லோக்சபா தேர்தலில் இருந்த கூட்டணி, தற்போதும் தொடர்கிறது. ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு ஒதுக்கீடு வழங்கப்படும் என்றால், எங்களுக்கு, 25 சதவீத இட ஒதுக்கீடு கேட்போம்.அனுபவமில்லாமல், பெண்கள் குறித்து தவறாக பேசி வரும், உதயநிதி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். முதன்முறை ஜெ., எனக்கு சீட் கொடுத்தார். நின்றேன்; வென்றேன். இரண்டாவது முறை மேலும் ஒரு சீட் கொடுங்கள். நாங்கள் வென்று காட்டுகிறோம். அப்போது தான், அடுத்த முறை மூன்றோ, நான்கோ பெறுவதற்கான வாய்ப்பு இருக்கும். சசிகலா விடுதலையானால், அவரைப் பிடித்தவர்கள் அவருக்கான ஆதரவை தெரிவிப்பார்கள் என்பது என் நம்பிக்கை.
இவ்வாறு, கருணாஸ் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE