அந்தியூர்: கோவில் பூசாரிகள் நலச்சங்கம் சார்பில், அந்தியூரில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாநில தலைவர் வாசு தலைமை வகித்தார். பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும். பாடசாலையில் உரிய பயிற்சி வழங்க வேண்டும். வீட்டுமனை இல்லாதவர்களுக்கு, வீட்டுமனை வழங்க வேண்டும். கிராம கோவில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். பூசாரி மறைவுக்கு பின், குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதிய பயனாளிகளின் எண்ணிக்கையை, 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும். ஒரு கால பூஜை பொருட்கள் வாங்க, நாளொன்றுக்கு, 150 ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE