ஈரோடு: ஈரோட்டில், வீட்டில் திருட்டு நடந்த சம்பவத்தில், நூறு நாட்களை கடந்தும், போலீசார் எப்.ஐ.ஆர்., போடாமல் காலம் தாழ்த்தி வருவது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு, சாஸ்திரி நகர், குமரன் நகரை சேர்ந்தவர் சுரேஷ், 50; எல்.ஐ.சி., மற்றும் நியூ இண்டியா இன்சூரன்ஸ் ஏஜென்ட். கடந்த செப்.,29ல் பட்டப்பகலில் இவர் வீடு புகுந்து, ஒன்றரை பவுன் நகை, அரை பவுன் மோதிரம், கால் கிலோ வெள்ளி பொருள், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடி சென்றனர். பொருட்களின் மொத்த மதிப்பு மூன்று லட்சம் ரூபாய். புகாரின்படி சூரம்பட்டி போலீசார், அப்பகுதியில் இருந்த 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆராய்ந்து, திருட்டில் இருவர் ஈடுபட்டதை உறுதி செய்தனர். பைக்கில் வந்த திருடர்கள், பெட்ரோல் இல்லாததால் அப்பகுதியில் விட்டுச் சென்றதும் தெரிந்தது. நூறு நாட்களை கடந்தும் இதுவரை, எப்.ஐ.ஆர்., போடவில்லை. திருடர்களை பிடித்து, பொருட்களை மீட்டு விடுவோம் என, போலீசார் உறுதி கூறி வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுவாக திருட்டு வழக்குகளில், எப்.ஐ.ஆர்., போடுவதற்கு, சிபாரிசு தேவைப்படுவதாக, மக்கள் தரப்பில் வேதனை தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE