ஈரோடு: தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு, மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலவாழ்வு சங்கம், உணர்வுகள் அமைப்பு சார்பில், சமத்துவ பொங்கல் விழா, ஈரோட்டில் நடந்தது. மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். உணர்வுகள் அமைப்பின் தலைவர் மக்கள்ராஜன் முன்னிலை வகித்தார். சர்க்கரை பொங்கல் வைத்து கொண்டாடினர். அதை தொடர்ந்து குழந்தைகளின் கலை நிகழ்ச்சி, கல்வியாளர்கள் பங்கேற்ற பட்டிமன்றம் நடந்தது. விழாவில், செயலாளர் ஜோதிமணி, பொருளாளர் குப்புசாமி மற்றும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என பலதரப்பு மக்களும் கலந்து கொண்டனர். மேற்கு மண்டல தலைவர் விவேகானந்தன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE