ஈரோடு: ஊதியத்தில், 10 சதவீத ஆபத்து படி வழங்க, சாலை பணியாளர்கள் தீர்மானம் நிறைவேற்றினர். தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கத்தின், கோட்ட மாநாடு ஈரோட்டில் நேற்று நடந்தது. இணை செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் பாபு, மாநில பொருளாளர் தமிழ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக அறிவித்து ஆணை வழங்க வேண்டும். தொழில் நுட்ப கல்விதிறன் பெறா ஊழியருக்கான ஊதியத்தை, தற்போதைய ஊதிய மாற்ற பலன்களை உயர்த்தி வழங்க வேண்டும். சாலை பணியாளர் ஊதியத்தில், 10 சதவீதம் ஆபத்துப்படி வழங்க வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை, தனியாரிடம் வழங்குவதை கைவிட்டு அரசே பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE