கோபி: கோபி அருகே, கொளப்பலூரை சேர்ந்தவர் பூபதி, 40; நம்பியூர் தாலுகா, எம்மாம்பூண்டி கிராமம், கொமராபாளையம் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர். கடை விற்பனையாளர் ஆறுமுகம், 45; நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு, மது விற்பனை தொகை, 1.84 லட்சம் ரூபாயுடன், நண்பர் செல்வக்குமாருடன் ஆறுமுகம் பைக்கில் சென்றார். பழனிக்கவுண்டன்புதூர் அருகே, ஒரே பைக்கில் வந்த மூன்று பேர், செல்வக்குமாரின் கண்ணில் மிளகாய் பொடி வீசினர். இதனால் பைக் தடுமாறி இருவரும் கீழே விழுந்த சமயத்தில், ஆறுமுகத்திடம் இருந்த பணப்பையை, பறித்து கொண்டு மாயமாயினர். கடை மேற்பார்வையாளர் பூபதி புகாரின்படி, வரப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE