கோபி: காரை இரவல் வாங்கிய ஊழியர், திரும்ப ஒப்படைக்க மறுத்து, தலைமறைவாகி விட்டதாக, கோபி போலீசில், கடை உரிமையாளர் புகார் தந்தார். அந்தியூர் அருகே மைக்கேல்பாளையத்தை சேர்ந்தவர் சுகுமார், 39; கோபி அருகே கரட்டடிபாளையத்தில், எலக்ட்ரானிக்ஸ் கடை வைத்துள்ளார். நெல்லையை சேர்ந்த லட்சுமணன், 40, கடையில் பணிபுரிந்தார். கடந்த, டிச.,30ல், உடல்நிலை சரியில்லாத தன் மனைவியை, மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி, சுகுமாரின் ஹூண்டாய் காரை லட்சுமணன் பெற்று சென்றார். அதன்பின், இதுவரை திருப்பி ஒப்படைக்கவில்லை. லட்சுமணன் மொபைல் எண்ணை சுகுமார் தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்படி, கோபி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE