கோபி: தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், ஏழு பேர் மீது கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கோபி அருகே மொடச்சூரை சேர்ந்தவர் லதா, 43; அதே பகுதியை சேர்ந்தவர் கோமதி, 44; இருவருக்கும், வழித்தடம் சம்பந்தமாக, ஏற்கனவே பிரச்னை உள்ளது. அதே பகுதியில் பொதுக்குழாயில் நேற்று முன்தினம் இரவு, இருவரும் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில், லதா தரப்பில் மூவரும், கோமதி தரப்பில் நால்வரும், தாக்கி கொண்டனர். இது தொடர்பாக கோபி போலீசார், இரு தரப்பிலும் ஏழு பேர் மீது, வழக்குப்பதிவு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE