ஈரோடு: ஈரோட்டில் அதிவேகத்தில் வந்த பஸ் மோதியதில், பெண் கட்டட தொழிலாளி பலியானது, சோகத்தை ஏற்படுத்தியது. ஈரோடு, வீரப்பன்சத்திரம், பெரியவலசு, நால்ரோட்டை சேர்ந்தவர் முனியாண்டி, 30, கட்டட தொழிலாளி. சித்தோடு, ராயர்பாளையம் புதூர், தட்டாங்குட்டையை சேர்ந்த ராமசாமி மனைவி லட்சுமி, 55; சக கட்டட தொழிலாளியான இவருடன், நேற்று காலை ஸ்கூட்டி பெப் மொபட்டில், ஈரோட்டில் இருந்து பவானி சாலையில் சென்றார். அப்போது அதிவேகத்தில் வந்த, நாகலாந்து மாநில பதிவெண் கொண்ட தீபம் டிராவல்ஸ் ஏர் பஸ், மொபட் மீது மோதியது. இதில் தடுமாறி சாலையில் விழுந்த லட்சுமி மீது, பஸ் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்தில் பலியானார். முனியாண்டி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE